என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு வங்கி"
- ராஜலிங்கம் தாலி செயினை அரசு வங்கியில் அடகு வைத்தார்.
- வங்கி ஊழி யர்கள் அவரை வங்கியை விட்டு வெளி யேற்றிதாக கூறப்படுகிறது
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயில் அருகே சம்பவ ராயபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மனைவி செல்வம் (வயது 60). இவர் 3 சவரன் தாலி செயினை காட்டுமன்னார் கோவிலில் உள்ள அரசு வங்கியில் அடகு வைத்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அடகுவைத்த தாலி செயினை மீட்பதற்காக மூதாட்டி வங்கிக்கு சென்றார். பின்னர் தாலி செயினை வாங்கி மூதாட்டி கொண்டுவந்த கைப்பையில் வைத்து வெளியே வந்தார். இதனையடுத்து மூதாட்டி செல்வம் சந்தேகத்தின் பேரில் பையை திறந்து பார்த்தார்.
அப்போது பையில் வைத்திருந்த நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி வங்கி ஊழியர்களிடம் இதுகுறித்து தெரிவித் துள்ளார். இதனை கண்டு கொள்ளாத வங்கி ஊழி யர்கள் அவரை வங்கியை விட்டு வெளி யேற்றிதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூதாட்டி காட்டு மன்னார் கோயில் போலீஸ் நிலை யத்தில் புகார் ெகாடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கி மற்றும் அதன் அருகில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன நகை சுமார் 1.5 லட்சம் மதிப்பு ஆகும். பகல் நேரத்தில் வங்கியில் இருந்த மூதாட்டியின் நகை காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவரின் மனுவுக்குப் பதில் அளித்த ரிசர்வ் வங்கி, எந்தெந்த வங்கியில் என்னவிதமான மோசடிகள் நடந்துள்ளன என்பது குறித்து தெரிவிக்காமல், ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்பட்ட இழப்பு குறித்த விவரத்தை மட்டும் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ரிசர்வ் வங்கி கடந்த 15-ம் தேதி சந்திரசேகர் கவுட்டுக்கு அளித்துள்ளது.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ.ஆயிரத்து 928.25 கோடியும், அலகாபாத் வங்கிக்கு ரூ.ஆயிரத்து 520.37 கோடியும், ஆந்திரா வங்கிக்கு ரூ. ஆயிரத்து 303.30 கோடியும், யூசிஓ வங்கிக்கு ரூ.ஆயிரத்து 224.64 கோடியும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஐடிபிஐ வங்கிக்கு மோசடி மூலம் ரூ.ஆயிரத்து 116.53 கோடியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. ஆயிரத்து 95.84 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. ஆயிரத்து 84.50 கோடியும், பேங்க் ஆப் மகாராஷ்டிராவுக்கு ரூ.ஆயிரத்து 29.23 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.ஆயிரத்து 15. 79 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தவிர கார்பரேஷன் வங்கிக்கு ரூ.970.89 கோடியும், யூனைடெட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.880.53 கோடியும், ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு ரூ.650.28 கோடியும், சின்டிகேட் வங்கிக்கு ரூ.455.05 கோடியும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மோசடி காரணமாக கனரா வங்கிக்கு ரூ.190.77 கோடியும், சிந்த் வங்கிக்கு ரூ.90.01 கோடியும், தீனா வங்கிக்கு ரூ.89.25 கோடியும், விஜயா வங்கிக்கு ரூ.28.58 கோடியும், இந்தியன் வங்கிக்கு ரூ.24.23 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவர் ஒரு லட்சம் கடன் வாங்கித் திருப்பிக் கட்டாமல் சென்றால் கூட அதைக்கூட மோசடி கணக்கில் எடுத்துக்கொண்டு ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு வங்கியிலும் எத்தனை மோசடிகள் நடந்துள்ளன, எந்த வங்கியில் அதிகபட்சமாக மோசடிகள் நடந்துள்ளன என்பது குறித்து ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை.''
இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார். #RBI #ReserveBank #BankFraud
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்